பேரறிஞர் அண்ணாவின் 115- வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில் :
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இதில் கருத்து கூற ஏதும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் நீண்ட காலம் முதல்வராக நீடிக்க வேண்டும் என மயிலாடுதுறை சட்டநாதர் கோவிலில் வேண்டிக் கொண்டேன் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.