Rock Fort Times
Online News

காதல் திருமணம் செய்த ஐ.டி. ஊழியர் தற்கொலை…

திருச்சி பெரிய கடை வீதி வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 33). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகா (31) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் திருச்சியில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி கார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த காருக்கான கடனை திருப்பி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 5 ந்தேதி கிருத்திகா வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கிருந்து கணவர் வெங்கடேனிடம், செல்போனில் கீர்த்திகா பேச முயன்றுள்ளார் . ஆனால், நீண்டநேரம் தொடர்பு கொண்டும் எடுக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த கீர்த்திகா கணவரின் நண்பர் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கணவரின் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அறையில் வெங்கடேசன் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர், கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கீர்த்திகா வெளியூரிலிருந்து அவசரமாக ஊர் திரும்பினார். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து தூக்கில் பிணமாக தொங்கிய வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்