திருச்சி தென்னூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 44 ).இவரது மனைவி சுகுந்தா (வயது 35). சுகுந்தாவின் கம்மலை காண வில்லையாம். இதுகுறித்து சுகுந்தா தனது கணவர் ராஜசேகரிடம் கேட்டுள்ளார். இதனால் விரக்தி அடைந்த ராஜசேகர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சுகுந்தா கொடுத்த புகாரின் பெயரில் காணாமல் போன ராஜசேகரை தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.