Rock Fort Times
Online News

திருச்சியில் கலையிழந்த ஹோலி பண்டிகை.

வண்ணமயமான ஹோலி பண்டிகை, மிகுந்த உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி நாளில், மக்கள் ஒன்று கூடி வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி விளையாடுவாா்கள். மற்ற பண்டிகைகளைப் போலவே, குஜியா மற்றும் பாங் போன்ற ஸ்பெஷல் ஹோலி உணவுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் உபசரிப்பார்கள். திருச்சியில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வடமாநிலத்தினா் தாக்கப்படுவதாக பரவும் வதந்தியின் பயத்தால் திருச்சி பொியகம்மாளத் தெரு, நடு குஜூலி தெரு, சின்னகமாளத் தெரு ஆகிய பகுதிகளில் குழந்தைகள் மட்டுமே உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடியதால் ,வழக்கமாக கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை கலையிழந்து காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்