Rock Fort Times
Online News

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் !எம்.பி திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்!

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்தில் முத்தரசநல்லூர் ,பெட்டவாய்த்தலை ,பெருகமணி கொடியாலம், குழுமணி ஆகிய ஊராட்சிகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன. தலா ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவற்றை   திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் துவக்கி வைத்தார். பெட்டவாய்த்தலை, கொடியாலம் ஆகிய ஊர்களில் காங்கிரஸ் கொடியை ஏற்றி திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், மாநில செயலாளர் கே.ஆர் ராஜலிங்கம் மாமன்ற, உறுப்பினர் ரெக்ஸ் மாநில பொதுச் செயலாளர் பெனட் அந்தோணி ராஜ் பேட்ரிக், ராஜ்குமார், அந்தநல்லூர் வட்டார தலைவர்கள் கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி , ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம், சிறுகமணி கே.ஆர் ஆர். ராஜா ,பெருகமணி ஊராட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எழிலரசன் ,புகழேந்தி ராமசாமி ,அர்ஜுன், திருநாவுக்கரசு, கதிர்வேல், மணப்பாறை சிவ சண்முகம் ,சுப்பிரமணியன், சுரேஷ், காவேரி,வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்