திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்…! * வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்தவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்
பேங்க்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணியின் உடைமையில் ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த கஞ்சா 9.82 கிலோ இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்தவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு இந்திய மதிப்பில் 10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
Comments are closed.