தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். 3 ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி 1ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை மத சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டம் நடக்கும் இடத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
