திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்துக்கு முன்னால் அரியலூர் பகுதியில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக பேருந்து ஓட்டுனர் லாரியை முந்துவதற்காக வலது பக்கம் முந்தி செல்ல முயன்ற போது பேருந்தின் இடது பக்கம் லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 30 பயணிகளும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்கள். அதில் இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
