8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று( அக்.28)ஒப்புதல் அளித்தது.மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் அமைக்கப்படுவதாக ஜனவரி, 2025ல் அரசு அறிவித்தது. அதன்படி, 8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 8 வது ஊதிய குழு தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும். மேலும் இந்த அமலாக்கம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். மேலும், மாநில அரசுகள் இந்த பரிந்துரைகளை முழுவதும் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று கடந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்கின. அதே போன்று தற்போதும் மாநில அரசு ஊழியர்களும் மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Comments are closed.