Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது தொடா்கதையாகிவருகிறது. நேற்று சிங்கப்பூாிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏா்லைன் விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியிடம் சுங்கத்துறை அதிகாாிகள் சோதனை நடத்தியபோது 24 கேரட் தங்க கட்டியினை பயணி தன்னுடைய உள்ளாடையில் வைத்து மறைத்து எடுத்து வந்தது தொியவந்தது.அவாிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 279 கிராம் எடையுள்ள தங்க கட்டியின் மதிப்பு சுமாா் 15,63,795ரூபாய் என அதிகாாிகள் தொிவித்துள்ளனா். மேலும் இதேபோல் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஏா் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணியிடமிருந்து 120 கிராம் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 6,72,600 ரூபாய் என அதிகாாிகள் தொிவித்துள்ளனா். வெவ்வேறு நாட்டிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் அடுத்தடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதால் அதிகாாிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்