திருச்சி மாவட்டம் சமயபுரம் காருண்யா நகரை சேர்ந்தவர் சமதர்மதாஸ். இவரது மனைவி ஜெயா (வயது 59). இவர் திருச்சி சமயபுரம் நால்ரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து டவுன் பஸ்ஸில் மாம்பழச்சாலைக்கு வந்தார். மாம்பழச்சாலையில் இறங்கும் போது இவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து ஜெயா திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.