மண்ணச்சநல்லூரில் உள்ள பகவதி அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வணிக வைசியர் சங்கம் சார்பில் பகவதி அம்மன் திருக்கோயில் 124ம் ஆண்டு திருவிழா டிசம்பர் 26 ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவின் 7ம் நாளான இன்று(02-01-2025) பகவதி அம்மனுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் நேர்த்தியாக வளைகாப்பு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், பக்தர்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. குழந்தைப்பேறு, திருமணத் தடை நீங்கும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் வளையல்களை அம்மனுக்கு அளித்தனர். இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Comments are closed.