Rock Fort Times
Online News

திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் கிடைத்தது எப்படி?- போலீஸ் அதிகாரிகள் விசாரணை…!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், வெளிநாட்டு கைதிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கையை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் செல்போன், நாகேந்திரன் என்பவரிடம் 100 கிராம் கஞ்சா, நைஜீரியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரிடம் செல்போன் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகள், கைதிகளுக்கு செல்போன், கஞ்சா கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்