திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால்பண்ணை அருகே செயல்படும் தனியார் பாரில் போலி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அந்த பாருக்கு சென்று சோதனை செய்த போது, அங்கு புதுச்சேரி மது பானங்களை வாங்கி வந்து டாஸ்மாக் மது போல போலி லேபிள்கள் ஒட்டி விற்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 34) உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் கார்த்தி மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இதுபோல் மற்றொரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. ஆகவே, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.

Comments are closed.