Rock Fort Times
Online News

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் தமிழக முழுவதும் அதிகரித்து வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து
சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் ஆன்லைன் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் மாதத்துக்கு தலா 300 முதல் 500 புகார்கள் வரை பெறப்படுகின்றன. இதில், ஆன்லைனில் பொருட்கள் விற்பனை, பகுதி நேர வேலை வாய்ப்புகள், கல்வி உதவித்தொகை வழங்குதல் தொடர்பான மோசடிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன . எனவே, மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோல, இணையவழியில் உதவித்தொகை, கல்விக் கடன் வழங்குவதாகக் கூறும் விளம்பர இணையதளங்களை முழுவதுமாக ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இணையவழி மோசடியாளர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்