திருச்சி வரகனேரி பெரியார் நகரை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (63). இவர் காந்தி மார்க்கெட்டில் கொத்தமல்லி, மிளகாய் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கொளஞ்சியப்பனின் வீட்டின் அருகில் இருந்த மரம் முறிந்து வீட்டின் சுவற்றின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கொளஞ்சியப்பன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கொளஞ்சியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.