உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு….
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
சாலை விபத்துகளில் சிக்கும் சிலர் மூளை சாவு அடைந்து இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த நேரத்தில் அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் பேசி உடல் உறுப்புகளை தானமாக பெறுகின்றனர். இறக்கும் தருவாயில் உள்ள அவர் கொடுக்கும் உடல் உறுப்புகள் மூலம் பல நோயாளிகள் மறுவாழ்வு பெறுகின்றனர். தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் இனி அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.