திருச்சி, வயலூர் ரோடு, சீனிவாச நகர் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் மற்றும் வாசன் சிட்டி நலச்சங்கம், வாசன் வேலி மக்கள் நலச் சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் வாசன் சிட்டி ஆர்ச் அருகில் உள்ள ஜே.எம்.மஹாலில் ஜூன் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை நடந்த இந்த மருத்துவ முகாமில் எலும்பு அடர்த்தி சோதனை, சர்க்கரை நோய் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு நரம்பியல், ரத்தத்தின் உப்பு அளவு கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.ரோஷன்ராஜ் தலைமையில் பொது மருத்துவர் பி.ஞானசேகரன், பொது மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் எம்.ராமநாதன், தோல் நோய் சிறப்பு மருத்துவர் எஸ்.விக்னேஷ் குமார், நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ஏ.அனுசுயா, காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.அழகம்மை உட்பட பலர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்று பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.