Rock Fort Times
Online News

திருச்சியில் குரூப் -4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 30ம் தேதி தொடங்குகிறது!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத் தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலு வலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட காலிப்ப ணியிடங்களை நிரப்பும் வகையில் குருப்-4 தேர்வுக்கான அறி விப்பாணை அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்தில் வெளியி டப்பட இருக்கிறது. இந்த தேர்வை போட்டித்தேர்வர்கள் சிறப் பாக எதிர்கொள்ளும் வகையில் இலவசமாக சிறப்பு பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணி அளவில் தொடங்க உள்ளது. மேற்கண்ட பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுனர்களை கொண்டு அனைத்து பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத் தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து போட்டித் தேர்வர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிர தீப்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்