திருச்சி கே.கே.நகர் ரங்கா நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிதா (வயது 38). பட்டதாரி. இவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஜீவராஜ் என்பவர் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணமும் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜிதா கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா விசாரித்து ஜீவராஜ் , சுகந்தி, செந்தில்குமார், பிரபா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.