திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் காப்பு காட்டில் வன தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமில் முதல் நிலை பணியாளர்களான வன காவலர்கள், வனக்காப்பாளர்கள,; வனவர்கள் மற்றும் கிராம வன குழு உறுப்பினர்கள், விவசாயிகள் ,பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் தீ நிகழ்வு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் தீ நிகழ்வினை தடுக்க முயன்ற வேட்டை தடுப்பு காவலர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தார.; இவ்வாறான அசம்பாவிதங்களை தவிர்க்க வனத்தீ எவ்வாறு ஏற்படுகிறது? அவற்றை தடுக்க எடுக்கும் முன்னேற்பாடுகள், தீ நிகழ்வு ஏற்பட்டால் அணைக்கும் முறை பற்றியும் விரிவாக விழிப்புணர்வு தரப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு திருச்சி கோட்டம் உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார்; தலைமை தாங்கினார.; இதில் தீநிலை அலுவலர்கள் பா.சத்தியவர்த்தனன்;, முத்துக்குமார் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.; திருச்சி வனசரக அலுவலர் வா. கோபிநாத் விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
