Rock Fort Times
Online News

ராஜபாளையம் அருகே, மலைப் பகுதியில் பரவும் காட்டுத்தீ…..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ளது சஞ்சீவிமலை. சஞ்சீவிமலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சீவிமலையில் அமைந்துள்ள கழுதக்கடவு பகுதியில் திடீரென்று காட்டுத்தீ பற்றி எரியத் துவங்கியது. காற்றின் வேகம் காரணமாக மலைப் பகுதியில் தீ பரவியது. மலையின் மேல் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, அடிவாரப் பகுதிக்கு பரவி விடுமோ என்று அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைப்பதற்கு வனத்துறை ஊழியர்கள், தீத்தடுப்பு வனக்காவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மலையடிவாரப் பகுதியில் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை கட்டுப்படுத்தி அணைப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்