உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் சந்திரா அறிவுறுத்தலின் பேரில், மாநகர் மாவட்ட இளைஞரணி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில், இளைஞர் அணி அமைப்பாளர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக பொதுமக்களுக்கு இன்று (மே 28) அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பாபு, வெங்கடேஷ், டேனியல், சங்கீதா, பாஸ்கர், ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதி நிர்வாகிகள் பாண்டு, கார்த்திக், சந்திரசேகர், சக்திவேல், ஜீவா, நிர்மலாஶ்ரீ மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மக்களுக்கு உணவு வழங்கினர்.
Comments are closed.