Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் விஜயகாந்த் வீட்டில் தீ விபத்து- போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்…!

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் , புது தெரு அங்காளம்மன் கோவில் அருகில் வசிப்பவர் விஜயகாந்த். இவரது வீட்டின் மாடியில் கூரை வீடு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(17-07-2024) மாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள குப்பை தொட்டியில் எரிந்து கொண்டிருந்த தீ விஜயகாந்த் குடிசை வீட்டிற்கு தாவியது. காற்றின் வேகம் காரணமாக குடிசை வீடு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது . இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு விஜயகாந்த் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் அந்த வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்