Rock Fort Times
Online News

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை; முன்னாள் சிறப்பு டி.ஜி.பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு..

கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது ராஜேஷ்தாஸ் என்பவர் சிறப்பு டி.ஜி.பி.யாக பணி புரிந்தார். அவர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் தெரிவித்தார். மேலும், புகார் அளிக்கச் செல்லும் போது ராஜேஷ் தாஸின் தூண்டுதலின் பேரில் செங்கல்பட்டில் எஸ்.பி.யாக இருந்த கண்ணன் என்னைத் தடுத்தார் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரத்திலுள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தி இருவர் மீதும் 400 பக்க குற்றப்பத்திரிக்கையை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி தீர்ப்பை வாசித்தார். குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டிருக்கிறது.  அவருக்கு உடந்தையாக இருந்த கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது…

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்