Rock Fort Times
Online News

விபத்தில் படுகாயமடைந்த 3 குழந்தைகளின் தந்தை மரணம்..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 50). தச்சு தொழில் செய்து வந்தார். திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ( 12.11.2023 ) மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருவெள்ளறை சென்று விட்டு திருப்பைஞ்சீலி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஒரு குழந்தை மட்டும் அவரது உறவினர் வீட்டில் இருந்தது. துறையூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பைஞ்சீலி அருகே சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், லோகநாதன், அவரது மனைவி சுமதி, குழந்தைகள் அபி, அனு, ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லோகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது . மனைவி மற்றும் 2 குழந்தைகள் லேசான காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினா் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், லோகநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்