Rock Fort Times
Online News

திருச்சி கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா…

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இதில், சங்கத்தின் துணைத் தலைவர் மேகராஜன், த.மா.கா. விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் புங்கனூர் செல்வம், புலியூர் தங்கவேல் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களில் முக்கியமானவர்களை கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அய்யாக்கண்ணு ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், சிப்காட் தொழிற்பேட்டை விவகாரத்தில் விவசாயிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பொய் வழக்கை ஏற்று குண்டர் சட்டத்தில் அடையுங்கள் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பின்னர் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தர்ணா போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்