Rock Fort Times
Online News

பிரபல நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்…!

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாடிய நாட்டுப்புற பாடல்கள் அனைத்திந்திய வானொலியில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஒலித்துள்ளன. இவரது சேவையை பாராட்டி கடந்த 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி காலமானார். அவருக்கு வயது 99. பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்