திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதிகளில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சமயபுரம், கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட், மேளவாளாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சமயபுரம் அருகே உள்ள மேல்வாளாடி பெரியார் நகரை சேர்ந்த ராஜா (வயது 47) என்பவர் போலி மது விற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கரூர் பகுதியில் இருந்து போலி மதுபானங்களை வாங்கி சமயபுரம், மேலவாளாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 500 ‘குவார்ட்டர்’ மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார், ராஜாவை கைது செய்தனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 969
Comments are closed, but trackbacks and pingbacks are open.