சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி அவர், அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று(11-03-2024) விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் எம்எல்ஏவாக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.