பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு- பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) ஜூன் 7, 9, 12 ம் தேதிகளில் ஈரோடு – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி – கரூர் இடையே மட்டும் இயங்கும். திருச்சி -பாலக்காடு ரயிலானது (16843) வருகிற 12- ம் தேதி திருச்சி -கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பணிகள் முடிந்ததும் கரூர்-பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.