திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தொடா்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் இடைத்தேர்தலில் வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு, திமுக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தேடித்தந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு இந்த இடைத்தேர்தல் மிகப்பெரிய அச்சாரமாக இருப்பது பாராட்டத்தக்கது. இந்த வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இதைவிட மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்று கூறினாா்.