சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் எட்டிகுட்டைமேடு பகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. இந்தநிலையில் ஈரோட்டில் வசிக்கும் குணால் (வயது 21) திருச்செங்கோட்டில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், எட்டிக்குட்டைமேடு அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அருகில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்தின் முன்பு நீண்டநேரம் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்டநேரம் ஆகியும் அவர் பாட்டி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் குணாலின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதற்கிடையே, கல்வியியல் கல்லூரியின் மேல்மாடியில் குணால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், குணாலின் உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் காதல் பிரச்சனை தொடர்பாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.