Rock Fort Times
Online News

கிராமப்புறத்தில் 31,000 வேலை வாய்ப்பு மத்திய ஊரக வளர்ச்சித் துறை முடிவு !

கிராமப்புற இளைஞர்களுக்கு 31 ஆயிரத்திற்கும் மேல் வேலை வாய்ப்பு  உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி துறை தரப்பில் வெளியிடப்பட்ட  செய்தி குறிப்பில், “ கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தீனதயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா திட்டத்தின் கீழ், 31,067 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காகமத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்யப்பட்ட 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.   இதன் மூலம், 31,067 கிராமப்புற ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியில் நாளை நடைபெறும் துறை ரீதியான நிகழ்ச்சியில், மேலும் கூடுதல் தகவல் வெளியாகலாம் என்று தெரிகிறது

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்