திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற முதியவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.