தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தை ஒரு விமானம் வந்தடைந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளின் உடைமைகளில் பண்டல் , பண்டலாக இ-சிகரெட்டுகள் இருந்தன. அந்த சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிகரெட்டுகளை கடத்தி வந்த 3 பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இ- சிகரெட்களின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments are closed.