Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் நாளை மின்தடை..!

திருச்சி, நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் நாளை 23.12.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம், புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்ஸ் சாலை, அண்ணாநகர், குத்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, புத்தூர், பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை, அருணா தியேட்டர், கணபதிபுரம், வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்