Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் ரயில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கம்…!

மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல ராமேஸ்வரம்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு வருகிற 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும். மேலும், ஸ்ரீ மாதா வைஷ்ணவ்தேவி காத்ரா- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். புதுக்கோட்டை, சிவகங்கையில் கூடுதலாக நின்று செல்லும். மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரம் -சார்லபள்ளி சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக 9 மணி 50 நிமிட நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு புறப்படும். திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு விஜயமங்கலத்தில் நிறுத்தப்படும். பின்னர் அங்கிருந்து பாலக்காட்டிற்கு முன்பதிவில்லா ரெயிலாக புறப்பட்டு செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்