Rock Fort Times
Online News

போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த் கைதை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரும் சிக்குகிறார்…!

கொகைன்’ போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட பல விருந்து நிகழ்ச்சிகளில் இந்த போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மேலும் பல நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தற்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகதெரிகிறது. நடிகர் கிருஷ்ணா “கழுகு, வானவராயன், வீரா, வன்மம்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்