முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்:- நாடாளுமன்ற நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு…!
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, அம்மாதம் 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த நிலையில், வருகிற திங்கட்கிழமை (மார்ச்- 10) நாடாளுமன்றம் மீண்டும் கூட இருக்கி றது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். இந்தநிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நாளை (09-03-2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்?. எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்? யார் யார் பேசுவது? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ADVERTISEMENT…👇
Comments are closed.