பேராசிரியர் க.அன்பழகனின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்வில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம்,விஜயா ஜெயராஜ்,செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்…
