Rock Fort Times
Online News

இந்திய மல்யுத்த வீராங்கனை தகுதி நீக்கம்: ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேச்சு…!

ஒலிம்பிக்கில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியான நிலையில், அவர் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்தது.  தகுதி நீக்கம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தகவல் அளித்தார்.  அப்போது அவர், வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது. அவருக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது. ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். அவர்களிடம் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு சிறந்த பயிற்சியாளர், ஆலோசகரை கொடுத்துள்ளோம்.  இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக இருந்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். வினேஷ் போகத்துக்கு தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்