காஞ்சிபுரத்தில் காஞ்சி மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர், தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ‘பெரியாரின் பேரன் தளபதியார’என்ற தலைப்பிலும், ‘கலைஞர் வழியில் தளபதியார்’ என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் கவிஞர் இனியவன், பேராசிரியர் விஜயகுமார், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர்பேசினர். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஐ.லியோனி பேசுகையில், திமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் பட்டியலிட்டு அவற்றில் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களைத் தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம் 48 திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்கும் திட்டம், மகளிர் உரிமை உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்போவது திராவிடமாடல் ஆட்சிதான். டெல்லி செங்கோட்டை அருகே திராவிட கோட்டை அறிவாலயம் திறந்த ஆட்சி திராவிட ஆட்சிதான். வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவரே பிரதமர் மதவெறி சக்திகளை தூக்கி எறிந்து பாசிச பிஜேபியை இந்தியாவை விட்டு விரட்டி மதசார்பற்ற சக்திகளை நம் இந்தியாவின் தலைமை பொறுப்பில் அமர வைக்கும் சக்தி திமுக தலைவர் தளபதியாருக்கு மட்டுமே உண்டு என தெரிவித்தார். இந்தகூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.