Rock Fort Times
Online News

டெங்கு, மலேரியா காய்ச்சல் – திருச்சி மாநகராட்சி நடவடிக்கை….

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் தோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக திருச்சியில் மழை விட்டு விட்டு பெய்வதால் சாலையோரங்களிலும்  பொது இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுகாதார அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் யாருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிவுரை தென்படுகிறதா ?அவ்வாறு தென்பட்டால் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கொசு மருந்துகள்  அடித்தும் , சாக்கடைகளில் கிருமி நாசினி தெளித்தும்  வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்