தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் புறக்கணிப்பு செய்து சென்றது மற்றும் தமிழர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று(07-01-2025) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் வக்கீல் வைரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பரணிகுமார், மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்துச்செல்வம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், மாணவரணி இன்ஜினியர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜன், கமால் முஸ்தபா, காஜாமலை விஜய், ராம்குமார், மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மத்திய மாவட்ட வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன்குமார், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், திருச்சி மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, கவுன்சிலர்கள் மஞ்சுளா பாலசுப்பிரமணியன், ராமதாஸ், புஷ்பராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சோழன் சம்பத், வட்ட செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், பி.ஆர்.பாலசுப்பிரமணியன், தனசேகர் , வாமடம் சுரேஷ், நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, அயூப்கான், அரவானூர் தர்மராஜன், சர்ச்சில், மின்வாரிய தொழிற்சங்கம் பாஸ்கரன், பந்தல் ராமு, வண்ணை மோகன், கதிரேசன், தென்னூர் அபூர்வா மணி, எம்.ஆர்.எஸ்.குமார், ராஜ்குமார்,மகளிர் அணி கவிதா, மகளிர் தொண்டரணி மதனா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் பேரூர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.
Comments are closed.