தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசை கண்டித்து திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…!
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயலும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாணவரணி, தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாணவரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் முத்து வெங்கடேஷ் அசாருதீன் ஆகியோர் தலைமையில் இன்று(25-02-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஸ்ரீநிதி சதீஷ்குமார், பிரகாஷ், ஹரிஹரன், கண்ணன், சாமிக்கண்ணு, மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், கீதா, செந்தாமரை கண்ணன், சந்திரசேகர், சிபிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Comments are closed.