திருச்சி மணிகண்டத்தை அடுத்த மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் ( வயது 40 ). இவரது மனைவி தேவிகா (39) பா.ஜ.க 58-வது வார்டு தலைவர். திருச்சி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் அன்புமலர். இவரது கணவர் குழந்தை வேல். இவர்கள் தேவிகாவின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை கிரையம் பெற்று குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் தேவிகா ஒரு புகார் அளித்தார். அதில், அன்பு மலர் மற்றும் அவரது கணவரும் தனது வீட்டு படுக்கை அறையை நோட்டமிட்டபடி சிசிடிவி கேமரா பொருத்தி வருவதாகவும், தனது இடத்தை அபகரிக்கவும், காம்பவுண்ட் சுவரை இடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்து இருந்தார் . அதன்பேரில் அன்பு மலர் மற்றும் அவரது கணவர் குழந்தைவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.