Rock Fort Times
Online News

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை(பிப்.5) முதல் நடைபயணம்: திருச்சியில் 7-ம் தேதி நடக்கிறது..!

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய மக்​களின் வாழ்​வா​தா​ர​மாக விளங்​கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தி​யளிப்​பு திட்டத்தை சிதைக்​கும் நோக்​கத்​தோடு செயல்​படும் பாஜக அரசை கண்​டித்​து, அகில இந்​திய காங்​கிரஸ் கமிட்​டி​யின் அறி​வுறுத்​தலின்​படி, தமிழகம் முழு​வதும் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதன் தொடர்ச்​சி​யாக நாளை (பிப்​.5) மதி​யம் 2 மணி​யள​வில் எனது தலைமை​யில் சென்​னை, திரு​வள்​ளூர், ஆவடி, செங்​கல்​பட்டு, காஞ்​சி மாவட்ட காங்​கிரஸ் கமிட்டி தலை​வர்​கள் முன்​னிலை​யில் நடைபயணம், கிழக்கு தாம்​பரம் பாரத மாதா தெரு, வேளச்​சேரி சாலை சந்​திப்​பில் அமைந்​துள்ள காம​ராஜர் சிலை அரு​கி​லிருந்​து, மேற்கு தாம்​பரம் – சண்​முகம் சாலை வரை நடை​பெறவுள்​ளது. அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. இதே​போன்​று, பிப்​.7-ம் தேதி திருச்​சி​யிலும், 8-ம் தேதி திண்​டுக்​கல்​லிலும், 9-ம் தேதி தென் காசி​யிலும், 12-ம் தேதி கோவை​யிலும் நடைபயணம் நடை​பெறும். இவ்​வாறு அதில் அவர் கூறி​யுள்​ளார். முதல்​வருக்கு நன்றி  செல்வப்பெருந்தகை வெளி​யிட்ட மற்றொரு அறிக்​கை​யில் “சென்னை – விழுப்​புரம் நெடுஞ்​சாலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள பேருந்து நிலை​யத்​துக்கு இந்​திரா காந்​தி​யின் பெயரை சூட்ட வேண் டுமென்று முதல்​ வருக்கு கோரிக்கை விடுத்​திருந்​தோம். அதன்படி, பேருந்து நிலையத்திற்கு இந்​திரா காந்​தி​யின் பெயரை சூட்டி அறி​விப்பு வெளி​யிட்ட முதல்வருக்கு தமிழக காங்​கிரஸ் சார்​பில்​ நன்​றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறி​யுள்​ளார்​.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்