Rock Fort Times
Online News

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து- திருச்சியில் காங்கிரசார் போராட்டம்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சாலை சுங்க வரியை குறைக்க வேண்டும்,சிபிஐ மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்டக்கூடாது, இந்திய இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், அதானி சம்பந்தப்பட்ட ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டு குழு அமைத்திட வேண்டும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை போகக்கூடாது, உரம் மானியத்தை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரசார், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ்,நிர்வாகிகள் முரளி, ஜி.எம்.ஜி மகேந்திரன், கீரைக் கொல்லை சக்கரபாணி,நாகமங்கலம் சீனிவாசன்,ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம், பிரியங்கா பட்டேல், வக்கீல் அல்லூர் பிரபு, ஜீவா நகர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன்,பஜார் மைதீன், பட்டேல், நிர்மல்,நாச்சிகுறிச்சி அருண் பிரசாத்,கள்ளிக்குடி குமார், மகளிர் அணி அஞ்சு, மோகனாம்பாள்,வழக்கறிஞர் கிருபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்