காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைக்கொண்டாடும் விதமாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகேயுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் எம்எல்ஏவாக வேண்டும். கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். நானும் காங்கிரஸ் கட்சியின் ஒரு அடிமட்ட தொண்டன் தான். ஆசை என்பது அனைவருக்கும் பொதுவானது. அதே சமயம் அது பேராசையாக இருக்கக் கூடாது . கூட்டணி தலைமையிடம் முன்வைக்க வேண்டிய கருத்துக்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என கூறினார்.
Comments are closed.